புதன், 6 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -4) கோடீஸ்வர பரதேசியும் அகத்தியரும்

 அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 :    பகுதி - 4  


முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -3)

          கோடீஸ்வர பரதேசியும் 

ஜீவநாடி அகத்தியரும் !!


 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 



அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி - 4)


அனுமத்தாசன் அய்யா  தொடர்ந்து..கூறுகிறார்.....!

 

சுவடியை எடுத்து, பிரார்த்தனை செய்து படிக்க ஆரம்பித்தேன்.  

சில நிமிஷங்கள் ஓடின.





"என்னய்யா... ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறேஏமாத்தரியா?"

என்றான் கிண்டலுடன், அவனுடன் வந்த ஒருத்தன்.

 அவனை தலைவன் அடக்கினான்.   "ஒண்ணுமில்லை, அகத்தியர் கிட்டே கேட்டா, அவரு உன்னை பத்தியும், உன் குடும்பத்தை பத்தியும் சொல்ல ஆரம்பிக்கிறாரு.  அதான் யோசிக்கிறேன்" என்றேன் நிதானமாக.

 முதலில் இதை அந்த தலைவன் நம்பவில்லை.

 

பின்னர் "அடடே! என்னை பத்தி சொல்லறாரா?

என்ன சொல்லறாரு.. சொல்லு, சொல்லு " என்றான் சிறிது உற்சாகத்துடன்.

 தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஜீவ நாடியில் வந்ததை படிக்க ஆரம்பித்தேன்.  அவனுக்கு இதெல்லாம் புரியுமோ என்று எனக்கு உள்ளுக்குள் பயம் தான். நான் ஏதாவது ஒன்றைச் சொல்லி, அதை இந்த அசுரன் தவறாக எண்ணி ஆத்திரத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்பது தான் அது.

 "உன் பேர் ஏழுமலை.  உனக்கு மூணு பொண்டாட்டி. முதல் இரண்டு மனைவிகளுக்கு குழந்தை இல்லை.  

மூணாவது பொண்டாட்டிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறவியிலேயே நல்லாத்தான் இருந்தது. இப்போ அந்த குழந்தைக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை


இன்னும் சொல்லப் போனால் ஆறு மாதத்தில் அந்த குழந்தைக்கு முற்றிலும் கண் பார்வை தெரியாம போய்விடும். அந்த குழந்தையின் கண் பார்வை சிகிச்சைக்கு லட்ச கணக்கில பணம் வேணும்.

 கொலை செய்யவும் தயாராயிட்டே! " என்று மெதுவாக சொல்லி முடித்ததும், அவன் சட்டென்று எழுந்தான்.

 இதை கண்ட எனக்கு லேசாக நடுக்கம் வந்தது.

 

"ஏதோ தவறாகச் சொல்லி நன்றாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே.  

அகத்தியர் இந்த கொலைகாரனிடம் நம்மை சிக்க வைத்து விட்டாரே!" என்று கூட எண்ணினேன்.

 கீழே உட்கார்ந்த அந்த தலைவன் எழுந்து, சட்டென்று என் காலிலே விழுந்தான்.  அவனால் பேச முடியவில்லை. கண்ணில் நீர் ததும்பியது.

அவனது இந்த செய்கையைக் கண்டு அவனுடன் வந்தவர்களும்

திகைத்துப் போனார்கள்.

 "ஆமாங்க, அய்யா சொல்வது அனைத்தும் உண்மைதானுங்க.  


இந்த கோடீஸ்வர சாமியாரை கொன்னுட்டா மூணு லட்ச ரூபாய் தரேன்னு சொன்னாங்க. அப்படி செய்து அந்த பணத்தை கொண்டு குழந்தைக்கு கண் வைத்தியம் பார்க்கலாம்னு நெனச்சுதான் இப்போ இறங்கி இருக்கேன்" என்று தைரியமாக,

 

அதே நேரத்தில் மனது விட்டு சொன்னான் அவன்.

 இதை கேட்டு எனக்கு அடிவயிற்றில் புளியை கரைத்தது.

ஆனால் அவனுடன் வந்தவர்களுக்கு அவன் இப்படி உளறிக்கொட்டியது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

 "இந்த கொலை பண்ணி, அந்த பணத்தை வச்சுதான் குழந்தையின் கண் பார்வைக்கு வழி தேடணமா?" என்றேன்.

 "வேறு வழி?" "அகத்தியர்கிட்டேயே கேட்போம்.

அவர் சொல்லறபடி செய்வீங்களா?" என்று கேட்டேன்.


"கண்டிப்பா செய்யறேன் சாமி" என்றான். அவன் முரட்டுத்தனம் மாறி இருப்பது கண்டு சந்தோஷமாக படிக்க ஆரம்பித்தேன்

 "ஏற்கனவே நிறைய "பிரம்மஹத்தி தோஷம்" உனக்கு இருக்கிறது. போன ஜென்மத்தில் இளம் வயது பையன் ஒருவனை பூவரசம் கம்பு மூலம் அடித்ததால், படாத இடத்தில் பட்டு அவன் கண்ணை பறிகொடுத்தான்.

அதன் பலனாகத்தான் இந்த ஜென்மத்தில் உன் குழந்தையின் கண் பார்வையும் பறிபோனது.

 இப்போது ஒரு உயிரை கொன்று அந்த பணத்தை கொண்டு உன் ஒரே வாரிசுக்கு கண் வைத்தியம் செய்தாலும், பணம் தான் செலவழியுமே தவிர அந்தக் குழந்தைக்கு கண் பார்வை வராது." என்று சொல்லி நிறுத்தினார் அகத்தியர்.

 அவன் சோகத்துடன் அடுத்தது என்ன என்பது போல பரிதாபமாக பார்த்தான்.

 "என் குழந்தைக்கு பார்வை கிடைக்க வழி இல்லையா?" என்றான்.

 அகத்தியர் தொடர்ந்து கூறினார்.

"உன் குழந்தைக்கு கண் பார்வை வரவேண்டுமானால் மூணு வழி உண்டு"

 ஒன்று - இந்த கொலை தொழிலை அடியோடு விட்டு விடவேண்டும்



இரண்டு - கொல்லி மலைக்கு சென்று அங்குள்ள சித்த வைத்தியரிடம்

மூன்று மாத காலம் குழந்தைக்கு சிகிச்சை பெறவேண்டும்,

 என்று சொல்லிவிட்டு மூன்றாவது கட்டளையை சொன்னேன்.

 இதை கேட்டதும் அவன் கோபமாக எழுந்தான்.  

"இது என்னால் முடியாது" என்று அடிவயிற்றில் இருந்து ஆக்ரோஷமாக கத்தினான்.



ஶ்ரீ அகத்தியர் & போகர்  பதம் போற்றி!!

முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  நன்றிகள் 

★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/


இதன்  முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 5  (பகுதி -3)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!







கருத்துகள் இல்லை: