புதன், 6 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -2) கோடீஸ்வர பரதேசியும் அகத்தியரும்

அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 :    பகுதி - 2  


முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -1)

          கோடீஸ்வர பரதேசியும் 

ஜீவநாடி அகத்தியரும் !!




 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 


அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -2)





அனுமத்தாசன் அய்யா  தொடர்ந்து..கூறுகிறார்.....!

 எனக்கு மட்டும் "தெய்வ ரகசியமாக"  சொன்ன தகவல் இது

 "இவன் ஒரு சிவ பக்தன்".  

கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தான். கோயம்பத்தூருக்கு அருகே தொழிலொன்றைத் தொடங்கினான்.  அதிஷ்ட தேவதை இவனுக்கு கை கொடுத்தது.  மிக விரைவிலேயே பெரும் பணக்காரனாக மாறினான்.


இவனுக்கு திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இவனுக்கும், இவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை மனதில் கொண்டு, சில உறவினர்கள் கணவன்-மனைவி உறவில் புகுந்து, அவர்களுக்கு இடையே பிரிவை உண்டாக்கினர்.



இப்பொழுது, இவன் எல்ல சொத்துக்களையும் வைத்து கொண்டிருந்தாலும், வீட்டை விட்டு ஒரு நாள் இரவு யாரிடமும் சொல்லாமல் வெளியே வந்து விட்டான்.

 பல இடங்களில் பரதேசி போல் இவன் திரிய, உறவினர்களது வாரிசுகள் அனைவரும் இவன் இறந்து விட்டான் என்று எண்ணி (மனைவி உள்பட) சொத்துகளை அங்கு பங்கு போட்டு கொண்டிருக்கின்றனர்", 


என்று இந்த மனிதரின் கடந்த கால வரலாற்றை சொல்லி "இவன் கண்டிப்பாக பிழைப்பான்" என்பதை மட்டும் அந்த பெரியவரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை.

 

சிரித்தபடியே கையில் மீதி இருந்த பூச்சி மருந்து  பாட்டிலை திறந்தார்.

 நான் வெல வெலத்துப் போனேன்.


அகத்தியர் சொல்லிவிட்டார்.

நீங்கள் கண்டிப்பாக பிழைத்து விடுவீர்கள்,

என்று மட்டும் அந்த பெரியவரிடம் சொன்னேனே தவிர,

அவரது கடந்த கால வரலாற்றை பற்றி மூச்சு விடவே இல்லை.

 ஏனெனில், அகத்தியர் நாடியை நான் படிக்கும்போது, எதிரே உள்ளவரின் வாழ்க்கைப் பற்றி ஒரு குறிப்பினை சொல்லி விடுவார்.

இதை "தெய்வ ரகசியம்" என்று குறிப்பிடுவதினால்,

இதை பற்றி ஒரு போதும் வாய் திறந்து யாரிடமும் நான் சொல்வது கிடையாது.


"நீங்கள் விஷம் குடித்திருந்தாலும் கண்டிப்பாக பிழைத்துவிடுவீர்கள்"  

என்று சொல்லி மருத்துவமனைக்கு  போகும்படி வற்புறுத்தினேன்.

 

"எனக்கு சரியாக சொல்லவேண்டும்.

அகத்தியர் என்ன சொன்னார்? மீண்டும் ஒரு முறை படியுங்கள்" என்றார்.

 

எனக்கு எரிச்சல் வந்தது. ஏதோ காலை சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கே! என்று அவரை மனதுக்குள் திட்டிக்கொண்டே "கண்டிப்பாக பிழைப்பான் இவன்" என்று அகத்தியர் சொன்னதை அப்படியே படித்தேன்.


"நான் இதை நம்பவில்லைஎன்று சொன்னவர்சட்டென்று கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்துஅதன் மூடியை திறந்துஅதில் மீதி இருந்த விஷத்தை மடமடவென்று குடித்தார்.  


 இதை கண்டதும் எனக்கு அளவுக்கு மீறி பதட்டம் ஏற்பட்டது.  

போலிசுக்கு போன் பண்ணத்தான் வேண்டும், என்ற முடிவுக்கு வந்தேன்.


அவரோ, உதட்டோரம் வழிந்த அந்த விஷத்தை அப்படியே துடைத்துக் கொண்டு அமர்க்களமாக சிரித்தார்.

"
அய்யா! மீதமுள்ள விஷத்தையும் குடித்து விட்டேன். இப்போ நான் எப்படி பிழைக்க முடியும்? அகத்தியர் சொன்னது தப்புதானே?" இந்த கேள்விக்கு மாத்திரம் பதில் சொன்னால் போதும்" என்று சொன்னார்.

எனக்கு உடம்பு வெல வெலத்துப் போயிற்று. இனியும் தாமதிக்க கூடாது. ஏதாவது செய்து இவரை இந்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கிளப்பியே ஆக வேண்டும் என்று மனசு படபடவென்று அடித்து கொண்டது.

அவரை வாசலில் உட்கார வைத்து விட்டு பூசை அறைக்குச் சென்றேன். சில நாட்களுக்கு முன்பு எனக்கு கிடைத்த பழனி நவபாஷாண முருகன் விபூதி பிரசாதமும், சந்தனக் காப்பு பிரசாதமும் என் கண்ணில் தென்பட்டது. அதில் சிறிது எடுத்து கொண்டு, வேகமாக வாசலுக்கு ஓடி வந்தேன்.

"இதை சாப்பிடுங்கள்" என்று அந்த பிரசாதத்தை கொடுத்து, தண்ணீரும் கொடுத்தேன்.

என்ன நினைத்தாரோ தெரியாது, நான் கொடுத்த விபூதி, சந்தனத்தை அப்படியே சாப்பிட்டார். சுற்று முற்றும், என்னையும் உற்றுப் பார்த்துவிட்டு "அப்போ நான் வரட்டுங்களா?" என்று நிதானமாக சொல்லி விட்டு புறப்பட ஆயுத்தமானார்.

எப்போடா இந்த இடத்தை விட்டு கிளம்புவார்? என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு அவரது வார்த்தைகள் நிம்மதியை தந்தது.

"
சரி ஜாக்கிரதையாக போயிட்டு வாங்க, பக்கத்திலதான் ஆஸ்பத்திரி இருக்கு, அங்கே உடனே போறது நல்லது!'"

"
எதுக்கு?" "விஷம் சாப்பிட்டிருக்கீங்க உடனே போங்க. நான் வேணா துணைக்கு வரட்டுமா? என்றேன்.

"வேண்டாம், நானே போய்க்கறேன். அதான் அகத்தியரே சொல்லிவிட்டாரே, எனக்கு மரணமில்லைன்னு. பிறகு எதுக்கு ஆசுபத்திரிக்கு போகணம்? என்று கிண்டலாக சொல்லிவிட்டு சென்றார்.


அவர் செல்வதை பார்த்தேன். நடையில் உறுதி இருந்தது.


அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன். இவருக்கு எந்த வித ஆபத்தும் வந்து விடக்கூடாதே என்று.


அன்று ராத்திரி முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை. எந்த நிமிடத்தில் எந்த செய்தி வருமோ என்று. அரைமணிக்கு ஒருமுறை வாசலிலேயே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!

முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  நன்றிகள் 

★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/


இதன்  முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 5  (பகுதி -1)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!








கருத்துகள் இல்லை: